அன்பார்ந்த உழைக்கும் மக்களே! த.வெ.க. ஆட்சியமைத்து ஆகஸ்ட் 17-உடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. இந்நாளையொட்டி, சாதனைகள் என்ற பெயரில் ஒரு போலிப் பட்டியலைத்...
Day: August 17, 2026
காவிரி எல்லைப் பகுதிகளில் கர்நாடக வனத்துறையினரால் அந்தோணிசாமி, பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் சொல்லொணா அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. எல்லைப் பகுதிக்கு வேலை நிமித்தமாகவும், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செல்லும் அப்பாவித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை “வேட்டையாடுபவர்கள்” என்ற முத்திரைக் குத்தி, எவ்வித விசாரணையுமின்றித் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்வது கர்நாடக வனத்துறையினருக்குப் வழக்கமாகிவிட்டது. கர்நாடக அரசின் இந்த அராஜகப் போக்கிற்கும் மனித உரிமையற்றச் செயலுக்கும் எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சம்பவத்தில் தலையிட்டு, கர்நாடக அரசிடம் தனது பலமான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். இப்படுகொலையில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, பீட்டர், குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்குக் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் தலா ஒரு கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும். இச்சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடுநிலையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
