August 14, 2026

Day: August 14, 2026

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பெரியார் சிலையை வைக்கக்கூடாது என்று பேசிய ராம ரவிக்குமாருக்கு, அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் கடும் கண்டனம்! தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றக் கோரி, திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்துக்கு முயற்சித்த ராம ரவிக் குமார் தாக்கல் செய்த வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூா் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்றி நிறுவப்பட்டதாக சொல்லப்படும், தந்தை பெரியாா்  சிலையை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி உள்ளார்.  இந்த மதுரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான தவெக அரசின்  வழக்குரைஞா், தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் உள்ள பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயில் நிலத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலையை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளோம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். அதன் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் தந்தை பெரியாா்  சிலை வைக்கப்பட்டுள்ளதா என திருவையாறு வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி  வழக்கு  செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்துள்ளனர். கோயில் நிலத்திலோ அல்லது பொதுநிலத்திலோ, யார் சிலை இருக்க வேண்டும் என்பதை ராம ரவிக்குமார் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாட்டின் கோயில்களில், பெரும்பான்மை இந்து மக்கள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக போராடி ஆலய சமத்துவத்திற்காக அரும்பாடுபட்டவர் தந்தை பெரியார். ராம ரவிக்குமார் இருக்கும் சங்பரிவார் அமைப்பினர் எவரும் போராட்ட வில்லை.  கோயில்களில் அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகராக வேண்டும், நம் தாய் மொழியாம் அன்னை தமிழில் அர்ச்சனை  நடத்த வேண்டும் என்பதற்காக களமாடியவர் தந்தை பெரியார். அவரின் சிலையை கோயில் நிலத்தில் வைக்காமல் வேறு யார் சிலையை வைப்பது? இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சனாதான கொடுமையால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உழன்று கொண்டிருந்த போது, அதற்கு எதிராக போராடி நம் மக்களின் வாழ்வுரிமையை மீட்க, எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் தந்தை பெரியார். இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் இறைவன்  செயல் தானே? அவன் இன்றி அணுவும் அசையுமோ?    கோயில் நிலங்கள் அனைத்தும் மக்கள் நிலங்கள் தான். மக்களின் உரிமைக்காக போராடிய தலைவரின் சிலையை அங்கு வைக்காமல் எங்கு வைப்பது? தஞ்சை மாவட்டம் கண்டியூர், பிரம்மசிரக் கண்டீஸ்வரர், கோயில் நிலத்தில் தந்தை பெரியாரின் சிலை இருக்க, இந்த சமய அறநிலைத்துறை உரிய அனுமதி வழங்க வேண்டும். வழக்கை தொடுத்த, ராம ரவிக்குமார்,  மதுரை மாவட்டம் எழுமலை உத்தப்புரத்தில், வாழும் தேவேந்திரர், அருந்ததியர் மக்களை கோயிலில் பொங்கல் வைக்க விடாமல் தடுக்கும் சாதி, தீண்டாமைக்கு துணை போவதை முதலில் நிறுத்தட்டும். பிறகு பேசலாம் தந்தை பெரியார் பற்றி!  2008முதல், இன்று வரை படித்து முடித்து, அர்ச்சகர் பணிக்காக காத்து நிற்கும், 500க்கும் மேலான அனைத்து சாதி இந்து மாணவர்களின், வாழ்வுரிமைக்காக என்றாவது பேசியிருக்கிறாரா ராம ரவிக்குமார்?  கருவறை தீண்டாமையை இன்று வரை அமுல்படுத்துவது அவரின் அமைப்பு தானே? கோயில்பற்றியும், இந்துக்கள் பற்றியும் பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? வர்ணாசிரம சனாதனத்தின், அடையாள செயல்படும் ராம் ரவிகுமாரை தமிழக மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே,தந்தை பெரியார் சிலை குறித்த பிரச்சனையில் தவெக அரசு,  கோயில் நிலத்தில் சிலை வைக்க உரிய அனுமதி கொடுப்பதுடன், நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைத்து வழக்கை தள்ளுபடி செய்ய வைக்க வேண்டும் என்று கோருகிறோம். வா.ரங்கநாதன், தலைவர்,...