எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி. இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர்Continue Reading

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும், என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை வைத்திருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் இந்த கோரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் . தீர்ப்பளித்தContinue Reading

தலித், பகுஜன் அல்லது ஆதிவாசி அறிஞர்கள் நிறுவன ரீதியாக சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்கொள்வது புதிதல்ல. ரோஹித் வெமுலா, பயல் தத்வி, டெல்டா மேக்வால் அல்லது கிருபா சங்கர் என்ற தலித் இன்ஜினியரிங் மாணவர் சமீபத்தில் உன்னாவோவில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகள் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள், அதே சாதியினரால் இயக்கப்படும் நிறுவனங்கள், காவல்துறை, சட்டக் கட்டமைப்புகள் மற்றும் அதிகாரத்துவத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். நம்பிக்கையற்றContinue Reading

சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறை அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறை அதிகரித்து வரும் நிலையில்,  இந்த தாக்குதல்களை தடுப்பதில்  சட்டம் ஏன் முக்கியத்துவம் வெற்றிபெறவில்லை என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்தக் செய்தி குறிப்பில் சாதிவெறி, வன்முறை, தற்கொலை மற்றும் மரணம் பற்றிய சில சம்பவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1) நவம்பர் 8, 2021 அன்று, தீபா பி. மோகனன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை  11 நாட்களுக்குப் பின் முடித்தார்  . சர்வதேசContinue Reading

நன்றி : இயக்குநர். திருமிகு. ஞான இராஜசேகரன் இ.ஆ.ப., (ஓய்வு) எல்லோருக்கும் வணக்கம்.! ‘சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்’ என்ற தலைப்பில் வெளியான  என் பதிவிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பல அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் சில அனுபவ குறிப்புக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். நான் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன். என்ன விஷயம்? என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார்.  “நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன்  செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா” இப்படி அவர் சொன்னதும், நான் கேட்டேன் “நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?” என்று.  அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் “அந்த தங்கம்மாவின் கணவரே நான்தான்” என்று. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தேன். அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப் பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா ,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னேன். அந்தத் தேதியும் வந்தது .சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது. தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே   புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த நான்,அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் “இவர் உன் கணவர்தானே ?” தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் ” ஆமாம்” . நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்தொடங்கினேன்.Continue Reading

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், தெலுங்கானா பாஜகவின்  தலைவர் பண்டி சஞ்சய்யை பற்றி விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, பண்டி சஞ்சய் கே.சி.ஆர் ‘தேச விரோதி’ எனக் கூறி, அவரை பதவி விலகக் கோரினார். நவம்பர் 8 திங்கட்கிழமை அன்று, ‘மத்திய அரசிடம் இருந்து சில கேள்விகளுக்கு பதில் கேட்கும் அனைவரையும் பாரதிய ஜனதா கட்சி “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்துகிறது’ என்று தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் காவி கட்சியை கடுமையாக தாக்கினார். செய்தியாளர்களிடம்Continue Reading

நாங்கள் வாட் வரியை  ஒரு பைசா கூட உயர்த்தவில்லை, அதனால் குறைப்பு என்ற கேள்வியே எழ கூடாது.எந்த முட்டாள் நம்மிடம் வாட் குறைக்கச் சொல்வான்? அதை உயர்த்திய முட்டாள்தான் குறைக்க வேண்டும்” என்று கே.சந்திரசேகர் ராவ் கூறினார். நவம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய அரசை கடுமையாக சாடிய தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு மாநிலங்களை கேட்க மத்திய அரசுக்கு தார்மீக உரிமை இல்லை என்று தெரிவித்தார். நாங்கள்Continue Reading

இயக்குனர் ஞான இராஜசேகரன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்களின் பதிவு! ‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். நீதியரசர் சந்துரு, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை லிஜோ மோள் ஜோஸ்  மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நம் வணக்கத்துக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, நான்  திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் பழங்குடிமக்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவம் எனது நினைவில் வந்தது. அந்த அனுபவம் குறித்து நான் எழுதி வெளிவரப் போகும் புத்தகத்திலிருந்து சில பக்கங்கள்: சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்  அமரர்  கே.கருணாகரன் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அவரது சொந்த மாவட்டமான திருச்சூரில் என்னை கலெக்டராக நியமித்தார். முதன் முதலில் கலெக்டராக பொறுப்பு ஏற்பதற்காக திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தபோது வாசலின் அருகில் நான் ஒரு காட்சியைக் கண்டேன்.அங்கே 37 ஆதிவாசி குடும்பங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்புடன் பந்தல் போட்டு ஒரு  போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். ‘பராசக்தி’ படத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ரங்கூனிலிருந்து சென்னை வந்திறங்கிய உடன் முதலில் காண்பது பிச்சை கேட்கும்  ஒரு பிச்சைக்காரனை. அப்போது அவர் சொல்வார்: “தமிழ்நாட்டின் முதல் குரலா இது ?’என்று. அதுபோல நான்  கலெக்டராக நுழையும்போது முதன் முதலில் கண்டது ஆதிவாசி குடும்பங்களைத்தான்.  குழந்தைகள் அழுக்கு ஆடைகளுடன், பெண்கள் பட்டினியால் வாடிய முகங்களுடன் அங்கே குழுமியிருந்தார்கள். நீண்ட நேரம், என்னை இந்தக் காட்சி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.  அதிகாரிகள் புடைசூழ , கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டேன். எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு சென்றார்கள். நான்  ADM ( Additional District Magistrate)ஐ கேட்டேன், “வாசலில் போராட்டம் ஏதோ நடக்கிறதே, என்ன விஷயத்துக்காக நடக்கிறது?” அவர் சிரித்துகொண்டே சொன்னார் : “அதை நீங்க கண்டு கொள்ள வேண்டாம். 15 வருஷமா இந்த போராட்டம் நடந்துகிட்டிருக்கு. பல கலெக்டர்கள் தீர்த்து வைக்க முயற்சி  செஞ்சாங்க. ஆனா ஒன்னும்  நடக்கலை” நான் “சரி,பிரச்னை என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்க,  ADM விளக்கிச் சொன்னார். ” நம்ம மாவட்டத்திலேயே மிகப்பெரிய திட்டம்- சிம்மினி அணை- 1976 ல் 400 கோடி ரூபாயில் கட்ட ஆரம்பிச்சாங்க. கட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னால் , அணையின் ரிசர்வயர் பகுதியில் குடியிருந்த 17  ஆதிவாசி குடும்பங்களை அங்கிருந்து வெளி யேத்தனாங்க. அப்போ அரசாங்கம் ஒவ்வொரு ஆதிவாசி குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் நிலமும் வீடு கட்ட பணமும் தர்றதா வாக்கு கொடுத்ததுன்னு ஆதிவாசிகள் சொல்றாங்க. ஆனா அது சம்பந்தமான நம்ம பைல்களில் அப்படி அரசாங்கம் உறுதிமொழி கொடுத்ததா எந்த ரிக்கார்டும் இல்லை.  அன்னைக்கு 17 குடும்பமா இருந்தவங்க  இன்னிக்கு  37 குடும்பமாக ஆயிட்டாங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் தர்ற வரைக்கும் சும்மா விடமாட்டோம்னு சொல்லி வன்முறையில் ஈடுபடறாங்க.Continue Reading

கடந்த 10 ஆண்டுகளாக சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக தலித் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர் தீபா பி.மோகனன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை வெளியேற்றும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றார். கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழக  பிஎச்டி மாணவர் தனக்கும் தனது ஆராய்ச்சிக்கும் தசாப்த காலமாக சாதி பாகுபாடு உள்ளது என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்த்தில் ஈடுபட்டதால் ,அந்த பல்கலைக்கழகம் தனது ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த பேராசிரியையை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் தலித் ஆராய்ச்சி அறிஞரானContinue Reading

இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைதேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி தெறிக்கவிட்டிருக்கிறது. 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.Continue Reading